கொடுத்துக் கொடுத்து சிவந்துபோன உங்கள் கரங்களிலேயே எம்மக்களின் வாழ்வை ஒப்படைக்கின்றோம். உங்கள் வாசல் நாடிவரும் தொண்டர்களுக்கு தேடிச்சென்று உதவிடுங்கள். அவர்கள் மீண்டும் உங்கள் வாசல் வரும் சிரமத்தைக் கொடுக்காமல் வேளையறிந்து உதவிடுங்கள். உங்கள் உறவுகளுக்கு வாழ்வளியுங்கள் nanri anpu ullankallukku பசியினால் கதறும் பாலகர்களின் அழுகுரல்கள், அதனை நிவர்த்தி செய்ய முடியாத பெற்றோரின் கவலை தோய்ந்த முகங்கள், நோய் வருத்த அல்லலுறும் முதியவர்கள், அவர்களுக்கு உதவ எவருமற்ற நிலை எனத் துன்பங்கள். உடுத்த உடையோடு உயிர் தப்பினால் போதும் என்று வந்த நிலையில் உங்கள் உறவுகள் வீதியோரங்களில் படும் இன்னல்கள் கொஞ்சமல்ல. பட்டவருக்கே புரியும் இடப்பெயர்வின் வேதனை. என்றோ ஒருநாள் நீங்களும் இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருந்திருப்பீர்கள். கற்பனை செய்து பாருங்கள் இடப்பெயர்வின் வலிகளை. இது வெறுமனே படிப்பவர்களுக்கு மனம் இளக எழுதுகின்ற எழுத்தல்ல. இதுதான் இன்றைக்கு வன்னி மக்களின் நிலைமை. திட்டமிட்ட இன அழிவிலிருந்து இம்மக்களை காக்க வேண்டிய பொறுப்பு சகதமிழர் ஒவ்வொருவருடையதும் கடமையாகும்..இவர்கள் இன்றி நாம் இல்லை இங்கு
துடிக்கின்ற இதயம் அதில் கொதிக்கின்ற உதிரம்
Glitter Graphics ::: Glitterboom.com